உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

சிதம்பரம் அருகே ​ 57 குடிசைகள் எரிந்து நாசம்

 சிதம்பரம்:

                      சிதம்பரம் அருகே 57 குடிசைகள் திங்கள்கிழமை இரவு தீப்பற்றி எரிந்து சாம்பலாயின . சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த மார்ச் 26-ம் தேதி 64 குடிசைகள் அமைக்கப்பட்டு தொல்காப்பியன் நகர் என பெயரிடப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் திருமாறன் இதனை திறந்து வைத்துள்ளார்.​ இந்நிலையில் இக்குடிசைகள் திங்கள்கிழமை நள்ளிரவு திடீரென தீப்பிடித்தது.​ தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.​ எனினும் தீவிபத்தில் 57 குடிசைகள் எரிந்து சேதமடைந்தன.எஸ்.பி.​ நேரில் விசாரணை:​​ விஷ​மி​களின் நாசவேலை காரணமாக குடிசைகள் தீப்பற்றியிருக்கலாம் எனக் கூறப்பட்டதால் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மற்றொரு தீவிபத்து:​​ சிதம்​ப​ரம் தேரடிபிள்ளையார்கோயில் தெருவில் உள்ள செல்வம் என்பவரது ஒர்கஷாப் திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது.​ அருகில் உள்ள கலியபெருமாள் வீட்டிலும்,​​ வள்ளிக்கந்தனின் மரப்பட்டறையிலும் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior