உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

இன்ஜினியரிங் மாணவர் மீது இளம்பெண் கிராமத்தினருடன் எஸ்.பி.,யிடம் புகார்


கடலூர்: 

                    கடலூர் அருகே இளம் பெண்ணை ஏற்றியதாக இன்ஜினியரிங் படித்துவரும் வாலிபர் மீது பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கிராமத்தினர் எஸ்.பி.,யிடம் புகார் செய்தனர். கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் மணிகண்டமூர்த்தி (25). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் தங்கராசு மகள் புனிதரசி (24). இவர் வீட்டில் இருந்த படி பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மணிகண்டமூர்த்தியும் புனிதரசியும் காதலித்து வந்தனர். இந்நிலையில் புனிதரசியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்து கூறி மணிண்டன் அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். தற்போது புனிதரசியின் ஏழ்மை நிலையை காரணம் காட்டி திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதனால் ஏமாற் றமடைந்த புனிதரசி நியாயம் கிடைக்கவேண்டி பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்த சுய உதவிக்குழுக்களை சேர்த்த பெண் கள் உள்ளிட்ட 100க்கு மேற்பட்டவர்களுடன் எஸ்.பி., அஸ்வின் கோட்னீசை சந்தித்து புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத் தியதைத் தொடர்ந்து புனிதரசி உள்ளிட்டோர் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் மணிகண்ட மூர்த்தி மீது புகார் செய்தனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior