உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

போக்குவரத்துக்கு லாயக்கற்ற கொடியம்பாளையம் சாலை

 கிள்ளை: 

                     தெற்கு பிச்சாவரத்தில் இருந்து கொடியம்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக் குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரத்தில் இருந்து நாகை மாவட்டம் கொடியம்பாளையம் மீனவ கிராமம் 6 கி.மீ தொலைவில் உள்ளது.

                    தற்போது கடலூர் மாவட்டத்துடன் நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் 10.5 கோடி ரூபாய் செலவில் உப்பனாற்றில் உயர் மட்டப்பாலம் கட்டப்பட்டது. காட்டுமன்னார்கோவிலில் நடந்த விழாவில் துணை முதல் வர் ஸ்டாலின் பாலத்தை திறந்து வைத்தார். கடந்த மாதம் முதல் சிதம்பரத்திலிருந்து கொடியம்பாளையத்திற்கு மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் கொடியம்பாளையம் சாலை மிகவும் குறுகலாகவும், கற்கள் பெயர்ந்தும் கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பஸ் வந்தால் இரு சக்கர வாகனங்களில் செல் பவர்கள் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. எனவே, இப்பகுதி சாலையை அகலப்படுத்தி தார் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior