உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

கால்நடை மருத்துவமனை கோரி சாலை மறியல் செய்ய முடிவு


புவனகிரி: 

              கால்நடை மருத்துவமனை கோரி சாலை மறியல் செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
 
இதுகுறித்து மேலமூங்கிலடி ஊராட்சி தலைவர் செல்வி சதானந்தம் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: 
   
                       புவனகிரி அடுத்த மேலமூங்கிலடி ஊராட்சியில் 650க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அவர்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு திடீரென நோய் தாக்கினால் அப்பகுதியினர் ஆறு கிலோ மீட்டர் தூரம் உள்ள சி.முட்லூர் மற்றும் புவனகிரி கால் நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மழைக்காலத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்டால் அவர்கள் கால்நடைகளை அழைத்து செல்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலமூங்கிலடியில் கால்நடை மருத்துவமனை கோரி பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவமனை அமைக்க கோரி பொது மக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior