உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

விருத்தாசலத்தில் காலாவதியான மருந்துக் குவியல்

 விருத்தாசலம்:

                    விருத்தாசலம் மணிமுத்தாற்றில் செவ்வாய்க்கிழமை காலை காலாவதியான மருந்துகள் குவியலாகக் கிடந்தன .இதில் மாத்திரைகள்,​​ ஊசி மருந்துகள்,​​ டானிக் வகைகள் இருந்தன.​ இந்நிலையில் ​ ​சிறிது நேரத்தில் அந்த மருந்துகளை அடையாளம் தெரியாத சிலர் கொளுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. விருத்தாசலம் ஆற்றில் காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்ட இடம் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருந்ததால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. தமிழகத்தில் காலாவதியான மற்றும் போலி மருந்து விற்பனை விவகாரம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுகாதார அதிகாரிகள் முழு வீச்சில் மருந்துக் கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.​ இந்நிலையில் மருந்துக் கடைக்காரர்​ யாரேனும் ஒருவர் காலா​வ​தியான மருந்துகளை இங்கு கொட்டிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.​​


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior