உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

மின்தடை அதிகரிக்கும் வேளையில் பகலிலும் எரியுது தெரு விளக்குகள்

 நெல்லிக்குப்பம்: 

                            பகலிலும் மின் விளக்குகள் எரிவதால் மின்சாரம் வீணாகிறது. தமிழகம் முழுவதும் மின்சார பற்றாக்குறை நிலவி வருகிறது. மின் சிக்கன நடவடிக்கையாக தினமும் மூன்று மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நெல்லிக்குப்பம் ஆலைரோடு சந்திப்பில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது. அதேப் போன்று பண்ருட்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை லிங்க் ரோடு சந்திப்பில் தொடர்ந்து பகலிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென அரசு தொடர்ந்து வலியுறுத்தினாலும் அதிகாரிகள் கடைபிடிப்பதாக தெரியவில்லை.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior