உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

ஆலோசனை கூட்டம்

 சேத்தியாத்தோப்பு: 

                       எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்தது. பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் சிட்டிபாபு தலைமை தாங்கினார். தலைவர் தேவதாஸ் படையாண்டவர் முன் னிலை வகித்தார். வீரசோழன் வரவேற்றார். இளவரசன், டாக்டர் பன் னீர்செல்வம், பாலமுருகன், கோபாலகிருஷ் ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தியின் சிலையை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதப்படுத்தி வரும் ஆலை நிர் வாகத்தை கண்டிப்பது. அவரது முழு உருவச்சிலையை ஆலையின் முன்பு திறக்க சர்க்ரை துறை ஆணையமும், ஆலை நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு அலுவலர்கள் மற்றும் கரும்பு உதவியாளர்கள் கரும்பு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுப்பதை கண்காணிக்க தனி குழு அமைக்க வேண்டும் உட் பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior