உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

மின்னல் எய்ட்ஸ் தடுப்பு சங்கம் முப்பெரும் விழா


சிதம்பரம்: 

                          சிதம்பரத்தில் புவனகிரி மின்னல் எய்ட்ஸ் தடுப்பு சங்கம், சென்னை தென்னிந்திய எய்ட்ஸ் செயல் திட்டம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டு,குழந்தைகளுக்கான கட்டாய கல்வி சட்டம் மற்றும் மகளிர் தினம் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. சிதம்பரம் ஆறுமுக நாவலர் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மின்னல் எய்ட்ஸ் தடுப்பு சங்கத்தின் செயளாளர் கண்ணதாசன் வரவேற்றார். சங்க உறுப்பினர் செல்வராஜ் திட்டம் குறித்துப் பேசினார். அண்ணாமலை பல்கலைகழக பேராசிரியை பிரியா, அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலையப்பள்ளி தலைமையாசிரியை ராணி, குடந்தை லோட்டஸ் சங்க இயக்குனர் முத்துக்குமார், மோகன் தாஸ், வாஞ்சிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவிகளின் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. சங்க செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior