உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பம் வரும் 24ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்

 கடலூர்: 

                 ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்ப படிவம் வரும் 24ம் தேதிக்குள் அனுப்ப வேண் டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:   

                       பள்ளி கல்வித் துறையைச் சேர்ந்த அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் உட்பட சிறப்பாசிரியர்கள் 2010 -11ம் கல்வியாண் டிற்கு பொது மாறுதல் வழங்க விண்ணப்பப் படிவங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டில் வழங் ப்பட்ட விண்ணப்பப் படிவத்திலயே இந்த ஆண்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பபடிவ மாதிரியை அந்தந்த 'நோடல்' மைய தலைமை ஆசிரியர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். மாவட்டத்திற்குள்ளோ (அ) மாவட்டத்திற்கு வெளியோ மாறுதல் கோரும் ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் பரிந்துரையுடன் 29ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலருக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். கலந்தாய்விற்கான நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். முதுகலை ஆசிரியர் பதவியிலிருந்து வட்டார வளமைய மேற்பார்வையாளராக மாறுதல் கோரும் ஆசிரியர்கள் விண்ணப்பத்தினை தலைமை ஆசிரியர் வழியாக அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி முடித்திருக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior