உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

ஊராட்சி அலுவலகத்தில் ஆவணங்கள் திருட்டு

 கடலூர்: 

                       ஊராட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து 'செக் புக்' உள்ளிட்ட ஆவணங்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வடலூர் அடுத்த வடக்குத்து ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்ய இருந்தனர். அதனையொட்டி ஊராட்சி உதவியாளர் ஜெய்சங்கர் கடந்த 16ம் தேதி இரவு ஆவணங்களை சரிபார்த்து வைத்து விட்டு நள்ளிரவிற்கு பிறகு அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் (17ம் தேதி) காலை வந்து பார்த்த போது பூட்டு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது  ஊராட்சி படிவங்கள், தீர்மான நோட், அஜென்டா, செக் புக், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து ஊராட்சி உதவியாளர் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு  பதிந்து விசாரித்து வருகின்றனர்.  ஊராட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஆவணங்களை மட்டுமே திருடிச் சென்றிருப்பது அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior