உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு : மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

ஸ்ரீமுஷ்ணம்: 

                     வீட்டில் தூங்கிய பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் அடுத்த எம்.பி. அக்ரகாரத்தை சேர்ந்தவர் சரவணன். வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி ஞானம்மாள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் பின் கதவை திறந்துக் கொண்டு மர்ம ஆசாமிகள் இருவர் வீட்டினுள் நுழைந்தனர். இவர்களை கண்டு திடுக்கிட்ட ஞானாம்மாள் கூச்சலிட்டார். உடன் மர்ம ஆசாமிகள் இருவரும் ஞானாம்மாள் கழுத்தில் அணிந்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள எட்டரை சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். ஞானாம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம ஆசாமிகள் தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவத்திற்கு முன்பாக ஞானம்மாள் வீட் டிற்கு அருகில் உள்ள சின்னமனி என்பவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 'டிரங்' பெட்டியை தூக்கிச் சென்று அருகில் உள்ள கரும்பு வயலில் வைத்து உடைத்து ஏதேனும் நகைகள் உள்ளதா என தேடியுள்ளனர். பெட் டியில் துணிகள் மற்றும் முக்கிய பத்திரங்கள் மட் டும் இருந்ததால் பெட் டியை அப்படியே விட்டுச் சென்றனர். 

                       தகவல் அறிந்த ஸ்ரீமுஷ் ணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப் பட்டு சின்னமணி வீட்டில் இருந்த டிரங் பெட்டில் இருந்து மோப்பம் பிடித்து கரும்பு வயல் வழியாக சரவணன் வீட்டிற்கு வந்து ஞானம்மாள் தூங்கி கொண்டிருந்த இடம் வரை சென் றது. பின்னர் வெளியே வந்து மெயின் ரோடு வழியாக சாத்தமங்கலம் கிராமத்திற்கு செல்லும் பெலாந்துறை வாய்க் கால் கரையில் சிறிது தூரம் சென்று நின்றது.  இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக் குப் பதிந்து மர்ம நபர் களை தேடிவருகின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior