உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

செம்மொழி மாநாட்டுக்கான விழிப்புணர்வு : சிதம்பரத்தில் இன்று 'குறுமாரத்தான்' ஓட்டம்


சிதம்பரம்: 

                   உலக தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த அண்ணாமலை பல்கலை மாணவ, மாணவிகளின் குறுமாரத்தான் ஓட்டம் இன்று (20ம் தேதி) நடக்கிறது. தமிழக அரசு சார்பில் கோவையில்  வரும் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலக செம்மொழி மாநாடு நடக்கிறது. மாநாடு குறித்து மாணவ, மாணவியர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் குறுமாரத்தான் ஓட்டப் பந்தய போட்டி இன்று (20ம் தேதி) நடக்கிறது. மாலை 5மணிக்கு பல்கலைக்கழக வளாக அண்ணாமலை  செட்டியார் சிலை அருகில் இருந்து புறப்பட்டு ராஜேந்திரன் சிலை, சிதம்பரம் நகர வீதிகள் வழியாக சென்று பல்கலைக்கழக உடற் கல்வித்துறை மைதானத்தை அடைகிறது. பங்கேற்கும் அனைவருக்கும் சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. போட்டியில் முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் ராமநாதன் துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் பதிவாளர் ரத்தினசபாபதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior