உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

இடம் கையகப்படுத்தியதை கண்டித்து மறியல் : அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் உடன்பாடு


சிதம்பரம்: 

                             தனியார் மின் உற்பத்தி நிலையம் கட்ட கையகப்படுத்தப்பட்ட இடத்திற்கு கூடுதல் இழப்பீடு கோரி  மறியல் செய்ய முயன்றவர்களிடம் ஆர்.டிஓ., பேச்சுவார்த்தை நடத்தியதால் உடன்பாடு ஏற்பட்டது. சிதம்பரம் அருகே தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க பரங்கிப்பேட்டை பகுதிக்குட்பட்ட கரிக்குப்பம், புதுக்குப்பம், புதுப்பேட்டை, தோப்பிருப்பு, பஞ்சங்குப்பம், புதுச்சத்திரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் இடம் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ., மற்றும் விவசாயிகள் சார்பில் சிதம்பரம் ஆர்.டி. ஓ., அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடக்க இருந்தது. 

                      பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சண்முகம் தலைமையில் ஊர்வலமாக வந்தனர். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர்  மணிவாசகம், நகர செயலளர் சேகர், ஏ.ஐ.டி.யூ.சி., சேகர் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். மே 3ம்  தேதி நிலம் கையகப்படுத்திய கம்பெனி அதிகாரிகளை வரவழைத்து பேசி தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் மறியல் கைவிடப் பட்டது.

download this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior