உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

மொரீஷியஸ் ஜனாதிபதி விருது


கடலூர்: 
 இம்
                     மொரீஷியஸ் நாட்டில் நடந்த அகில இந்திய அறிஞர்கள் மாநாட்டில் பல்லவன் கல்வி நிறுவனங்களின்  தலைவருக்கு மண்ணின் மாமனிதர் பட்டத்தை அந்நாட்டின்  ஜனாதிபதி வழங்கினார். கோபியோ சர்வதேச அமைப்பு சார்பில் அகில  இந்திய அறிஞர்கள் மாநாடு மொரீஷியஸ் நாட்டில்  கடந்த 4ம் தேதி நடந்தது.  இந்தியாவில் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் நீதிபதிகள், தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் கடலூரைச் சேர்ந்த பல்லவன் கல்வி நிறுவனங்களின்  தலைவர் டாக்டர் முத்துவின் கல்வி சேவையை பாராட்டி  மண்ணின் மாமனிதர் பட்டத்தை   மொரஷியஸ் நாட்டின்  ஜனாதிபதி அனிருத்த ஜெகநாத்  வழங்கினார். நிகழ்ச்சியில்  ஜனாதிபதி மனைவி  சரோஜினி ஜெகநாத்,  முன்னாள் தலைமை தேர்தல்  அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, இந்திய சைபர் குற்றவியல்  தலைமை நீதிபதி ராஜேஷ் டாண்டன், கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி  ஸ்ரீதர் ராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior