உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

வெள்ளாற்று மேம்பாலம் தடுப்பணை பணி தீவிரம்

 கிள்ளை: 

                                       சிதம்பரம் அடுத்த கிள்ளை - பரங்கிப்பேட்டையை இணைக்கும் மேம்பாலம் கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில் சாலையோர தடுப்பணை அமைக்கப்பட்டு வருகிறது. பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட  20க்கும்  மேற்பட்ட ஊராட்சியைச் சேர்ந்த கிராமத்தினர் சிதம்பரம் அடுத்த கிள்ளை - பரங்கிப்பேட்டை இடையே வெள்ளாற்றை  படகு மூலம் கடந்து வந்தனர். இதன் காரணமாக வெள்ளாற்றில் மேம்பாலம் கட்ட அப்பகுதியினர் பல முறை அரசுக்கு  கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  

                இந்நிலையில் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்கள் பரங்கிப்பேட்டை-  கிள்ளையை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து  கடந்த 2006ம் ஆண்டு பாலம் குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு, 2008ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் துவங்கியது. தற்போது பொன்னன்திட்டு கரையில் இருந்து பரங்கிப்பேட்டை கரை வரை சுமார் ஒரு கி.மீ., மேல் உயர் மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டு வரும் ஜூன் மாதத்தில் பாலம் திறப்பு விழாவிற்காக தடுப்பணை கட்டும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior