உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 20, 2010

சொத்து தகராறில் தந்தை கொலை :'பாசக்கார' மகன் போலீசில் சரண்

பரங்கிப்பேட்டை :  

                 சொத்து பிரித்து தராத ஆத்திரத்தில், தந்தையை மண் வெட்டியால் வெட்டி கொலை செய்த மகன், போலீசில் சரணடைந்தார்.

                கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பெரியப்பட்டு காட்டுத் தெருவைச் சேர்ந்தவர் தம்புசாமி (60); விவசாயி. இவருக்கு சேகர், ரமேஷ் (29) இருமகன்கள் மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. சேகர் குடும்பத்துடன் பண்ருட்டியிலும், ரமேஷ் சென்னையிலும் வசித்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பெரியப்பட்டிற்கு வந்து ரமேஷ், தந்தை தம்புசாமியுடன் வசித்து வந்தார். குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால், ரமேஷ் தனியாக வீடு கட்டிக் கொண்டு  வசித்து வருகிறார். புதிய வீட்டிற்கு மின் இணைப்பிற்காக, பரங்கிப்பேட்டை மின்சார அலுவலகத்தில் ரமேஷ் விண்ணப்பித்தார்.

                   இதையறிந்த, அவரது தந்தை தம்புசாமி மின்சார அலுவலகத்திற்கு சென்று, ரமேஷ் மின் இணைப்பு கேட்டுள்ள வீட்டின் மனை, எனது மகள் சாந்தி பெயரில் உள்ளது. அதனால் அவருக்கு புதிய மின் இணைப்பு தரக்கூடாது என கூறியுள்ளார். இதனால் மின் இணைப்பு கிடைக்கவில்லை.இந்நிலையில், நேற்று தம்புசாமி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு சென்ற ரமேஷ், தனக்கு தனியாக சொத்தை பிரித்து தர வேண்டும் என கேட்டார். அதற்கு மறுத்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ரமேஷ், தனது தந்தை தம்புசாமியை மண்வெட்டியால் தலையில் வெட்டினார். நிலை தடுமாறி கீழே விழுந்த தம்புசாமியை தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலமாக வெட்டினார். இதில் தம்புசாமி துடிதுடித்து இறந்தார். ரமேஷ் புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். புதுச்சத்திரம் போலீசார் ரமேஷை (29) கைது செய்தனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior