உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

கோயில் விழாவில் மாடு முட்டி 15 பேர் காயம்

நெய்வேலி :

           நெய்வேலியை அடுத்த இருப்பு கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது மாடு மிரண்டு முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு கிராமத்தில் புகழ்பெற்ற அரசியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் செடல் திருவிழா நடைபெறும். இதையொட்டி, 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் மாட்டு வண்டி மூலம் இக் கோயிலுக்கு வருவது வழக்கம்.அதுபோன்று இந்த ஆண்டு திருவிழா ஏப்ரல் 28-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்ற பின் மாட்டுவண்டி மூலம் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது இளைஞர்கள் சிலர் விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு மிகுந்த சத்தத்தை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதில் மிரண்ட வண்டி மாடு, மக்கள் கூட்டத்தில் புகுந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது. இதில் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் மாடு முட்டியும், கூட்டத்தில் மிதிபட்டும் 15 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனே விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைகாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்நிலையில் வியாழக்கிழமை இக் கோயிலில் தேர்த்  திருவிழா நடைபெற்றது.

பொது அறிவிற்கு:
வகைப்பாட்டு அறிவியலை உருவாக்கியவர் - கெரல் வினெயெஸ்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior