உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

பல்கலை., மாணவர்களுக்கு வசதியாக மாலையில் ரயில் இயக்க வலியுறுத்தல்


கடலூர் : 

             பல்கலை., மாணவர்களுக்கு வசதியாக மாலையில் ஒரு ரயிலை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்க உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.


இது குறித்து ரயில் பயணிகள் சங்க உறுப்பினர் சிவக்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

              அகலப்பாதை அமைப்பதற்கு முன்பு அனைத்து ரயில்களும் திருப்பாதிரிப்புலியூரில் நின்று சென்று கொண்டிருந்தது. அகலப்பாதை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு விரைவு ரயில்கள் திருப்பாதிரிப்புலியூரில் நிற்பதில்லை. பயணிகள் குறைவால் ரயில்வேயிக்கும் வருவாய் குறைய வாய்ப்புள்ளது. திருப்பாதிரிப்புலியூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற 2 திருக்கோவில்கள் பாடலீஸ்வரர், தேவநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்களுக்கு மிக தொலைவில் இருந்து பக்தர்கள் அதிகஅளவில் வருவதால் விரைவு வண்டிகள் நிறுத்துவது அவசியம் ஆகிறது. சோழன் விரைவு ரயில் திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, தாம்பரம், நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வசதியாக காலை, மாலை வேளைகளில் தலா 2 ரயில்கள் இயக்கப்பட்டன. எனவே சிதம்பரத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து புறப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பொது அறிவிற்கு:
தாவரத்தின் ஆண்பாகம் என்பது - மகரந்த தாள் வட்டம்

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior