உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

இடம் வாங்கித் தருவதாக ரூ.53 லட்சம் மோசடி : புதுச்சேரியில் துப்பாக்கியுடன் வாலிபர் கைது

கடலூர் : 

            விசைப் படகு கட்டும் தொழிலுக்கு இடம் வாங்கித் தருவதாக 53 லட்சம் ரூபாயை ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்ட வாலிபர் புதுச்சேரியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

            கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் இன்ஜினியர் கார்த்திக். இவர் சென்னையில் பணிபுரிந்த போது முதுநகர் அடுத்த சிவானந்தபுரத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவருடன் தங்கியிருந்தார். அப்போது லட்சுநாராயணனின் மைத்துனர் ராஜசேகர் (33) அறிமுகமானார். அப்போது கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களிடம் கடலூரில் விசை படகு கட்டும் தொழில் செய்வதற்கு இடம் வாங்கி தருவதாக கூறி ராஜசேகர் மற் றும் அவரது தந்தை சக்கரபாணி, ஆகியோர் 2007ம் ஆண்டு முன் பணமாக 53 லட்சம் ரூபாய் வாங்கினர்

               வெகு நாட்களாகியும் இடம் வாங்கித் தராததால் சந்தேகமடைந்து விசாரித் ததில், அந்த நிலத்தை ராஜசேகர் தனது பெயருக்கு வாங்கியது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தனர். பணத்தை திரும்ப கேட்டபோது ராஜசேகர், லட்சுமிநாராயணன், சக்கரபாணி ஆகியோர் கார்த்திக் வீட்டிற்கு சென்று துப் பாக்கியை காட்டி மிரட்டினர். இது குறித்து எஸ்.பி., உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ் பெக்டர் ரத்தினவேல், குணசேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ராஜசேகர், சக்கரபாணி உள்ளிட்டவர் களை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் நேற்று புதுச்சேரி இளங்கோ நகரில் தங்கியிருந்த ராஜசேகரை மடக்கி பிடித்தனர். அப்போது வீட்டை சோதனை செய்தததில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.


பொது அறிவிற்கு:
இரைப்பை முன் சிறுகுடலில் சேருமிடம் - பைலோரஸ்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior