உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

அனாதையாக கிடந்த பெண் குழந்தை : தீயணைப்பு படையினர் மீட்பு


நெல்லிக்குப்பம் : 

                நெல்லிக்குப்பம் முட்புதரில் அனாதையாக கிடந்த பெண்குழந்தையால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

            நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு முனியன் ஓடை வழியே அண்ணா நகரை சேர்ந்த பிரேமானந்தா, தமிழ்வாணன் நடந்து சென்றனர். அப்போது அங்குள்ள முட்புதரில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. அருகில் சென்று பார்த்தபோது 15 நாள் வயதுடைய பெண் குழந்தை அனாதையாக அழுது கொண்டிருந்தது.

               அக்கம்பக்கம் குழந்தையின் பெற்றோர் இருக்கிறார்களா என தேடிபார்த்தும் யாரும் இல்லாததால் அருகில் இருந்த தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் குழந்தையை மீட்டனர். நெல்லிக்குப்பம் போலீசார் குழந்தையை பெற்று அவசர ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் பெற்றோர் யார்? எதற்காக குழந்தையை போட்டுவிட்டு சென்றனர் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


பொது அறிவிற்கு:

மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம் - கீழாநெல்லி

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior