உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

பண்ருட்டி அருகே மதமாற்ற முயற்சி கிராம மக்கள் முற்றுகையால் பரபரப்பு

பண்ருட்டி : 

             பண்ருட்டி அடுத்த பூங்குணம் பிள்ளையார் கோவில் தெருவில் கிறஸ்தவ மத மாற்றம் செய்ய முயற்சி செய்த குழுவினரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

              பண்ருட்டி அடுத்த பூங்குணம் பிள்ளையார் கோவில் தெருவில் நேற்று காலை 8 மணிக்கு கிறிஸ் தவ மதத்திற்கு மாற வலியுறுத்தி 2 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் முகாமிட்டனர். அவர்கள் நோய் நொடி இருந்தால் ஜபம் செய்து சரிசெய்கிறோம். உங்கள் செல்போன் நம்பர் கொடுங்கள் என மதம்மாற வலியுறுத்தி பேசினர். இதனால் அப்பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் முத்துலட்சுமி, கண்ணம்மா உள்ளிட்ட 30 பேர் திரண்டு கிறிஸ்துவ மதம் மாற கொடுத்த புத்தகம், நோட்டீஸ் ஆகியவற்றை வீசி எரிந்து முற்றுகையிட்டனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் வருவதற்குள் அக்குழுவினர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு அப்பகுதியில் இருந்து தப்பித்தனர். இதனால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


பொது அறிவிற்கு:
       மனிதனின் உடலில் உள்ள மொத்த எலும்புகள் - 206

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior