உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

சென்னையில் விளையாட்டு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

              தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அளிக்கப்பட உள்ள 6 வார கால பயிற்சி வகுப்பிற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வரும் 17ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 6 வாரங்களுக்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, பென்சிங், ஹாக்கி, டென்னிஸ், கையுந்து பந்து விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, தேசிய போட்டியில் பங்கேற்றிருக்க வேண் டும். அல்லது பட்டம் பெற்றவர்கள், விளையாட்டில் ஆர்வமுள்ளவர் களாகவும், 25 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

                பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்களுக்கும், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான விண்ணப் பத்தை சென்னையில் பெரியார் நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலோ அல்லது www.sportsinfotn.com என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப் பங்களை வரும் 10ம் தேதிக்குள் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சென்றடைய வேண்டும். இவ் வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொது அறிவிற்கு:
சிறுகுடலின் நடுப்பகுதி - ஜெஜீனம்


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior