உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

பள்ளத்தில் கிடப்பவர்களை தூக்கி விடுபவர்தான் கருணாநிதி : பரங்கிப்பேட்டையில் அமைச்சர் பன்னீர்செல்வம் பெருமிதம்

பரங்கிப்பேட்டை : 

             பள்ளத்தில் கிடப்பவர்களை தூக்கி விடுபவர்தான் முதல்வர் கருணாநிதி என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

 பரங்கிப்பேட்டையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் புதியதாக கட்டப்பட்ட 168 வீடுகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் பன்னீர் செல்வம் வழங்கி பேசியதாவது: 

                இயற்கை சூழலோடு இங்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 168 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடலில் இருந்து 200 மீட்டரில் உள்ளவர்களுக்குதான் அரசு மூலம் வீடு கட்டித்தரமுடியும் என்கிற விதிமுறை இருந்தது. அந்த சட்டத்தை மத்திய அரசிடம் முதல்வர் பேசி 1000 மீட்டர் வரை உள்ளவர்களுக்கு வீடு கட்டிதர ஏற்பாடு செய்தார். அதனால்தான் இந்த பகுதியில் குடிசை மாற்றுவாரியம் மூலம் வீடுகள் கட்டிதர முடிந்தது.

               ஜெ., ஆட்சியில் இருந்தப்போது சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என சட்டசபையில் பேசினால், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வாங்கி கொடுத்ததாக பெருமையாக பேசுகிறார். நோட்டு, புத்தகம் ஒரு ஆண்டோடு வீணாகிவிடும். பள்ளத்தில் கிடப் பவர்களை தூக்கி விடுபவர்தான் முதல்வர் கருணாநிதி. கருணாநிதி ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்தினரும் 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் வரை நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைந்து வருகின்றனர் என்றார்.

               புதியதாக கட்டப்பட்ட வீடுகளை குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதி கட்டுப்பாட்டுதுறை அமைச்சர் தங்கவேலன் பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கி பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிதரப்படும். குடிசை மாற்று வாரியம் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் 46 ஆயிரம் கட்டி தரப்பட்டுள்ளது. இந்த பகுதியில்6 கோடியே 20 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் 168 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பொது அறிவிற்கு:
     யூக்ளினாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு - கசையிழை

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior