உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 07, 2010

கலப்பட டீத்தூள் விற்பனை சுகாதாரத்துறையினர் பறிமுதல்


குறிஞ்சிப்பாடி : 

               வடலூரில் டீத்தூளில், முந்திரி கொட்டைத் தோலை கலப்படம் செய்து விற்று வந்ததை சுகாதாரத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

           வடலூர் கோட்டைக்கரையை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் கலியபெருமாள். இவர் டீத்தூளில் முந்திரி கொட்டைத் தூள் கலந்து விற்பனை செய்வதாக சுகாதாரத்துறைக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து துணை இயக்குனர் மீரா உத்தரவின் பேரில், வடலூர் வட்டார மருத்துவர் லட்சுமி சீனுவாசன், துணை இயக்குனர் நேர்முக உதவியாளர் ஜானகிராமன் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியன், சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.

                 ஆய்வில் முந்திரிகொட்டைத் தூளை டீத்தூளில் கலப்படம் செய்து பாக்கெட்டில் அடைத்து விற்பனைக்கு அனுப்புவதற்காக வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டில் 400 கிலோ கலப்பட டீத்தூள், பேக்கேஜ் மிஷின், எடை இயந்திரம், போலி டீத்தூள் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்த டீத்தூள்களின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் இருக்கும். இதுபோன்ற டீத்தூள்கள் சாப்பிட்டால் தலைவலி மற்றும் புற்றுநோய் வரும் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

பொது அறிவிற்கு:

தாவர வைரஸ்களில் காணப்படுவது - ஆர்.என்.ஏ.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior