உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு இடம் தேர்வு: சி.இ.ஓ., நேரில் ஆய்வு






 
பண்ருட்டி : 

                    பண்ருட்டியில் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு தேர்வு செய்த இடத்தை சி.இ.ஓ., மற் றும் தாசில்தார் பார்வையிட்டனர். பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தாசில்தார் பாபு, தலைமையாசிரியர் சுப்ரமணியன் ஆகியோருடன் சி.இ.ஓ., அமுதவல்லி ஆலோசனை நடத்தினார். இதில் நகராட்சி சேர்மன் பச்சையப்பன், மாவட்ட தொழில் வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம், செயலாளர் வீரப்பன், மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் பாண்டுரங்கன், செயலாளர் ராஜா, கவுன்சிலர் தட்சணாமூர்த்தி, சிவிக் எக்ஸ்னோரா தலைவர் பசுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து சி.இ.ஓ., விழமங்கலம் நகராட்சி துவக்கப் பள்ளி பகுதியை பார்வையிட்டார். பின்னர் பண்ருட்டி உதவி தொடக்க கல்வி அலுவலர் அறிவழகனையும், துவக் கப் பள்ளி தலைமையாசிரியரிடம் துவக்கப்பள்ளியை 6,7,8,9ம் வகுப்பு பெண்கள் உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். 

இதுகுறித்து  கூறிய சி.இ.ஓ., அமுதவல்லி

                     'வரும் கல்வியாண்டு முதல் துவக்கப் பள்ளி பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்படும்' என்றார்.

Please don't print this Page unless you really need to - this will protect trees on planet earth.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior