உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

குழந்தைகள் கடத்தல் வதந்தியால் பண்ருட்டி அருகே பரபரப்பு

பண்ருட்டி : 

                 பண்ருட்டி அருகே குழந்தைகளை கடத்துவதாக ஏற்பட்ட வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

                          பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் காலனியைச் சேர்ந்த தேவி வீட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் வீட்டினுள் நுழைந்தனர். அப்போது தேவி சத்தம் போட்டதால் மர்ம நபர் கள் ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 10ம் தேதி இரவு மீண்டும் மர்ம நபர்கள் தேவி மற்றும் கெஜா வீடுகளில் புகுந்துள்ளனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தில் இப்பகுதி மக்கள் குழந்தை கடத்தல்காரர்கள் வீடு புகுந்திருக்கலாம் என்ற பீதியில் உள்ளனர். இதுகுறித்து தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் புதுப்பேட்டை போலீசாரிடம் கேட்ட போது அப்பகுதியில் குழந்தை கடத்தல் மற்றும் திருட்டு சம்பவம் நடந்ததாக ஏதும் புகார் இல்லை என்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior