உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

கிள்ளையில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்

கிள்ளை : 

                     கிள்ளையில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். சிதம்பரம் அடுத்த கிள்ளை தைக்காலைச் சேர்ந்தவர் சிவா. இவரது வீட்டிற்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக புவனகிரி அடுத்த வடகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 15 பேர் வேனில் வந்தனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் ஓட்டினார். மாப்பிள்ளை பார்த்து விட்டு திரும்புகையில் கீழச்சாவடி அருகே முன் சக்கர டயர் வெடித்தது. இதில் வேன் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி கவிழ்ந்தது. விபத்தில் வேனில் பயணம் செய்த வெற்றி (35), கணேசன் (45), சேகர் (45), நாகப்பன் (35), செல்வமணி (30) உட்பட 15 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து கிள்ளை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior