உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

சிறுகிராமத்தில் குடிநீர் பிரச்சனை: பொதுமக்கள் திடீர் சாலைமறியல்

பண்ருட்டி : 

                       பண்ருட்டி அடுத்த சிறுகிராமத்தில் குடிநீர் வசதி கோரி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பண்ருட்டி அடுத்த சிறுகிராமம் காலனியில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்கத் தொட்டியில் குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படவில்லை. இதனால் இப் பகுதியில் குடிநீர் கிடைக் காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50 பெண்கள் உட்பட 100 பேர் நேற்று காலை 10 மணிக்கு கடலூர் - சித்தூர் சாலையில் திடீரென சாலை மறியல் செய்தனர்.தகவலறிந்த புதுப்பேட்டை போலீசார் மற்றும் வி.ஏ.ஓ.,சம்பத் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று மறியல் செய்தவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடன் நடவடிக்கை எடுப் பதாக போலீசா ர் உறுதியளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் மறியலை விலக்கிக் கொண்டனர்.இந்த திடீர் சாலைமறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior