உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம்

நெல்லிக்குப்பம் : 

                 நெல்லிக்குப்பம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி நடந்தது. துப்புரவு அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். மேலாளர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். எழுத்தர் பாபு வரவேற்றார். சேர்மன் கெய்க்வாட்பாபு கொழு கொழு குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைக்கு பரிசு வழங்கினார். சமுதாய அமைப்பாளர் உமா, அமுதா, செவிலியர்கள் விஜயலட்சுமி, ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முகாமில் நடந்த கொழு கொழு குழந்தைகள் போட்டியில் 10 மாத குழந்தை பிரகதீஸ்வரன் முதல் பரிசை வென்றது. முகாமில் நகராட்சி பகுதியில் சேரும் குப்பைகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வைத்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அப் போது தான் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க முடியும். மக்களிடம் மகளிர் சுய உதவிக்குழுவினர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior