உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்: ஆட்சியர்

கடலூர்:

                      கடலூர் மாவட்டத்தில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இப்பதவிகளுக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்து உள்ளார். 

                       தமிழ்நாடு அரசு நடத்திவரும் மாநில நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆற்றலூட்டும் சங்கமானது, 4 மண்டல மற்றும் 52 மாவட்டக் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்களை நியமனம் செய்ய இருக்கிறது.  விருப்பம் உள்ள குடிமக்கள் மாணவர் நுகர்வோர் மன்றங்களை நடத்தி வரும், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் ஆர்வலர்கள், நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்படும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை பெறுவதற்குக் கடைசி தேதி 30-6-2010 என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior