உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

மத்திய சிறைக் கைதிகளுக்கு இலவச தையல் இயந்திரம்


கடலூர் : 

                 கடலூர் மத்திய சிறைக் கைதிகளுக்கு தமிழக சிறைப் பணி பேரவை சார்பில் 20 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. கடலூர் புனித அன் னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஆசிரியர் கிறிஸ் டினா லாரன்ஸ் சுகி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் எர்மின் விழா நோக்கம் குறித்து பேசினார். தமிழக சிறைப்பணி பேரவை கடலூர் கிளை பொறுப்பாளர் பீட்டர் செபஸ்டியன், லூர்து மேரி, லேம்பர்ட், லில்லி சற்குணம் சிறப்புரையாற்றினர். பின்னர் தமிழக சிறை பேரவை சார்பில் கடலூர் மத்திய சிறைக் கைதிகளுக்காக வழங்கிய 20 தையல் இயந்திரங்களை சிறைத்துறை டி.ஐ.ஜி., கோவிந்தராஜன் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். லூர்துமேரி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior