உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியல் வழங்கல்


கடலூர் : 

                      எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நேற்று அந்தந்த பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் நடந்தது. இதில் 30 ஆயிரத்து 873 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் மே மாதம் 26ம் தேதி வெளியிடப்பட்டது. 23 ஆயிரத்து 201 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதிப் பெண் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு பெற்றோருடன் நேரில் சென்று மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை பெற்றுச் சென்றனர். மேலும் மதிப்பெண் பட்டியல் பெற்ற மாணவர்கள் அரசு உத்தரவு படி அந்தந்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்புக்கான பதிவையும் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior