உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 16, 2010

அ.தி.மு.க.,-பா.ம.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைந்தனர்

ஸ்ரீமுஷ்ணம் : 

                 ஸ்ரீமுஷ்ணம் நகர அ.தி. மு.க., மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைந்தனர். ஸ்ரீமுஷ்ணம் நகர அ.தி.மு.க., மாஜி துணை செயலாளர் தங்க கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகர எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் சக்கரபாணி, நகர ஜெ., பேரவை தலைவர் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., இளைஞரணி சம்பந்தம், கீழ்புளியங்குடி கிளை செயலாளர் ரங்கநாதன் மற்றும் பாலு, செல்வம், நாகராஜ், மனுநீதிசோழன், மகளிரணி குமுதவள்ளி ஜெயலட்சுமி, நகர வன்னியர் சங்க தலைவர் கொளஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் அமைச்சர் பன்னீர் செல்வம் இல்லத் தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தி.மு. க.,வில் இணைந்தனர். தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி பகுதியில் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் தி.மு.க., நகர செயலாளர் தங்க.ஆனந்தன், துணை செயலாளர் சுப்ரமணியன், ஒன்றிய செயலாளர் முத்துசாமி, அவைத்தலைவர் சீனுவாசன், பேரூராட்சி துணைத் தலைவர் முருகானந்தம், ஒன்றிய பிரதிநிதி ராஜேந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior