
விஜயமாநகரம் கிராமத்தில் சூறைக்காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த சூறைக்காற்றுடன் மழைபெய்தது. இதில் சுமார் 30 ஏக்கர் வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தன. காற்றில் விழுந்த மரங்கள் வாழைத்தார் முற்றிய நிலையில் இருந்தன. மேலும் மரங்கள் குலையுடன் ஒடிந்து விழுந்ததால் சுமார் ரூ. 20 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக