உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

பலாப்பழம் வரத்து அதிகரிப்பு, விலை வீழ்ச்சி



தோட்​டத்​தில் கொட்​டப்​பட்​டுள்ள பழுத்து, அழு​கிய பலாப்​ப​ழங்​கள்.

பண்ருட்டி:

                 பலாப்பழம் அறுவடை மும்முரம் அடைந்து வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.​ இதனால் பண்ருட்டி சந்தையில் பலாப்பழம் ஒன்று ரூ.40 முதல் 100 வரை விற்பனையாவதால் விவசாயிகளும்,​​ வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர். பலாப்பழம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது பண்ருட்டி.​ 

                பண்ருட்டி கெடிலம் ஆற்றுக்கு தென்பகுதியில் வளம் நிறைந்த செம்மண் நிலப்பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள ​ முந்திரி காடுகளுக்கு இடையேயும்,​​ வீட்டுத் தோட்டத்திலும் பலா மரம் வளர்க்கப்படுகிறது. இப்பகுதியில் விளையும் பலாப்பழம் மிகுந்த சுவை கொண்டது.​ இதனால் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பண்ருட்டி பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுவர்,​​ பலாப்பழம் கமிஷன் மண்டி வைத்துள்ள வியாபாரிகள் பலாப்பழத்தை விவசாயிகளிடம் இருந்து பெற்று தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள வியாபாரிகளுக்கு டன் கணக்கில் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.பருவநிலை மாற்றத்தினால் இம்முறை பலா மரங்கள் காலதாமதமாக காய்ப்பெடுத்தாலும்,​​ மகசூல் பாதிக்கப்படவில்லை.​ தற்போது அறுவடை சீசன் உச்சகட்டத்தில் உள்ளதால் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.​ இதனால் விவசாயிகளும்,​​ கமிஷன் மண்டி வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளனர்.

இது குறித்து பண்ருட்டி -​ கும்பகோணம் சாலையில் பலாப்பழம் கமிஷன் மண்டி வைத்துள்ள பி.ஆர்.மாயவேல் கூறியது:

                விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் அறுவடை செய்து கொண்டு வரும் பலாப்பழங்களை பெற்று கமிஷன் அடிப்படையில் விற்று கொடுத்து வருகிறோம்.​ பண்ருட்டியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும்,​​ மும்பை,​​ பெங்களூர்,​​ ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு டன் கணக்கில் அனுப்பி வைக்கிறோம்.தற்போது அறுவடை சீசன் உச்ச நிலையில் உள்ளதால் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது.​ ஒரு சில வாரத்துக்கு முன் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் விலை போன ​ ஒரு டன் பலாப்பழம் தற்போது ரூ.5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரைதான் விலை போகிறது.விற்பனைக்காக அனுப்பியது போக எஞ்சிய பழுத்த,​​ அழுகிய பலாப்பழங்களை குப்பையில் கொட்டி வருகிறோம்.​ இதனால் விவசாயிகளும்,​​ வியாபாரிகளும் பாதிப்படைந்துள்ளோம் என்றார் அவர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior