உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

பதிவு கட்டணம் வாங்க மறுப்பு: சிதம்பரத்தில் திடீர் சாலை மறியல்

சிதம்பரம் : 

                     சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இரு சக்கர வாகனத்திற்கு பதிவு கட்டணம் வாங்க மறுத்ததால் பணம் செலுத்த வந்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் புதுச்சேரி வாகன பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு தமிழக பதிவு வேண்டும் என கடலூர் மாவட்டத்தில் போலீசார் கடுமையாக எச்சரித்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர். அதையடுத்து புதுச்சேரி பதிவு வைத்துள்ள இரு சக்கர வாகனங்களுக்கு தமிழக பதிவுக்காக வரி செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே பதிவு கட்டணம் செலுத்த சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நேற்று அதிக அளவில் கூட்டம் கூடினர். குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே கட்டணம் பெற முடியும். வங்கியில் பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பணம் வாங்க மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். மோட்டார் வாகன ஆய்வாளர் ரங்கநாதன் சமரசம் செய்ததைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior