உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 01, 2010

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழாவில் மாணவர்களுக்கு பரிசு

கடலூர் : 

                 கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த கோடை கால விளையாட்டு பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகளில் தலா 60 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 15 நாட்களாக உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப் பட்டது. அதேபோன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்திய கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்பில் 67 மாணவர்களும், 42 மாணவிகளும் பயிற்சி பெற்றனர். இந்த இரு பிரிவினருக்கும் கைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

                   இந்த பயிற்சிகளின் நிறைவு விழா நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் வரவேற்றார். பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கல்விஅலுவலர் கணேசமூர்த்தி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சென்னை முதுநிலை மேலாளர் தியோர், தலைமை ஆசிரியர் மாரியப்பன், பயிற்சியாளர்கள் இளங்கோவன், பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior