உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

பி.எஸ்ஸி. (நர்சிங்): அரசு இடங்கள் நிரம்பின


சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு
 
 
         அரசு மருத்துவக் கல்லூரிகளில் பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்புக்கு உரிய 125 இடங்களில் பெரும்பாலான இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரம்பிவிட்டன.
 
           பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்பில் அரசு கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரியவற்றில் சில இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.பி.எஸ்ஸி. (நர்சிங்), பி.ஃபார்ம், பி.பி.டி. உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜூலை 12) முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டு வருகிறது.பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்புக்கு அடுத்தபடியாக பி.ஃபார்ம். படிப்புக்கு உரிய 110 அரசு இடங்களில், சில இடங்களே காலியாக உள்ளன. 
 
               பி.பி.டி. (ஃபிஸியோதெரப்பி  படிப்பு) படிப்பில் மொத்தம் உள்ள 50 இடங்களில், பாதிக்கும் மேற்பட்ட அரசு இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.சுயநிதி அரசு ஒதுக்கீட்டு இடங்கள்: கலந்தாய்வு வரும் சனிக்கிழமை (ஜூலை 17) வரை நடைபெறுகிறது. சுயநிதி கல்லூரிகளில் பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்புக்கு உரிய 3,703 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், பி.ஃபார்ம். படிப்புக்கு உரிய 1,228 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், பி.பி.டி. படிப்புக்கு உரிய 736 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கு தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற உள்ளது.
 
கட்டணம் என்ன? 
 
                 சுயநிதி கல்லூரிகளில் பி.எஸ்ஸி. (நர்சிங்) படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.30,000; பி.ஃபார்ம்.-பி.பி.டி. படிப்பு அரசு ஒதுக்கீட்டு இடத்துக்கு ஆண்டுக்கு ரூ.28,000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior