உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

கடலூர் அருகே மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க கோரிக்கை

கடலூர்:

                    கடலூர் அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று, கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன் கோரிக்கை விடுத்தார். 

பாதிக்கப்பட்டவர்களுடன் சென்று அவர், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு: 

              கடலூர் அருகே நாயக்கர் நத்தம் காலனியில் அண்மையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். திட்டக்குடி கோடங்குடியில் கடந்த 9-ம் தேதி இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மலைக்கள்ளன் என்பவர் வீடு சேதப்படுத்தப்பட்டது. இதில் ஒரு தரப்பினர் மீது மட்டுமே போலீஸôர் நடவடிக்கை எடுக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த நிலையில் எதிரிகள் போலீஸôரைக் கண்டித்தே ஆர்ப்பாட்டம் நடத்தத் துணிந்து உள்ளனர். ஊரில் இல்லாதவர்களில் முற்போக்கு மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் நெப்போலியன் உள்ளிட்ட பலரது வீடுகளும் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. போலீஸôர் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior