உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் காமராஜர் பிறந்ததின பேச்சுப் போட்டி

சிதம்பரம்:
          சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த தின விழா பேச்சுப் போட்டி ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
               பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 26 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் மேல்நிலைப் பிரிவில் நந்தனார் ஆண்கள் பள்ளி மாணவர் ப.அஜித்குமார் முதலிடமும், நந்தனார் பெண்கள் பள்ளி மாணவி ப.பார்கவி இரண்டாமிடமும், ஆறுமுகநாவலர் பள்ளி மாணவி ந.நந்தினி மூன்றாமிடமும் பெற்றனர். உயர்நிலைப் பிரிவில் நிர்மலா மெட்ரிக் பள்ளி மாணவி ரிஷாந்தினி முதலிடமும், நந்தனார் ஆண்கள் பள்ளி மாணவன் ச.குமரவேல் இரண்டாமிடமும், ஆர்.சி.டி பள்ளி மாணவி மு.பிரியங்கா மூன்றாமிடும் பெற்றனர்.அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் எம்.கமல்கிஷோர்ஜெயின் போட்டிகளை தொடங்கி வைத்தார். பொருளர் எஸ்.பாலநாகசுப்பிரமணியன் வரவேற்றார். செயலர் ஏ.ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior