உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் மாணவியர் விடைத்தாள் மாயம் : தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு


           வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில், 229 மாணவியரின் விடைத்தாள்கள் மாயமானதால், தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 85 கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை இளங்கலை தேர்வுகள் நடந்தன. தேர்வு முடிந்து நான்கு லட்சத்து 50 ஆயிரம் விடைத்தாள்கள், 10க்கும் மேற்பட்ட மையங்களில் திருத்தப்பட்டன. தேர்வு முடிவுகள், நேற்று முன் தினம் வெளியிடப்பட்டு, அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் ஆற்காடு மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவியரில் இளங்கலை மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதிய 229 பேரின் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டதாக பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

துணைவேந்தர் ஜோதிமுருகன் கூறியதாவது

               ஆற்காடு மகாலட்சுமி கல்லூரி மாணவியரில், நான்கு பேரின் தேர்வு பேப்பர் திருத்தப்பட்டன. அதில், ஒரு பேப்பர் மட்டும் காணாமல்போய்விட்டது. இதனால், இக்கல்லூரியில் தேர்வு எழுதிய 229 மாணவியரின் தேர்வு முடிவுகளை தவிர மற்ற மாணவ, மாணவியரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. விடைத்தாள்கள் கல்லூரியில் காணாமல் போனதா, திருத்தும் போது காணாமல் போனதா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜோதிமுருகன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior