உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

மேட்டூர் அணை திறக்காததால் காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏமாற்றம்

கடலூர்:

              பாசனத்திற்காக மேட் டூர் அணை திறக்கப்படாததால் காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர். காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் உள்ள ஒரு லட்சத்து 46 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மேட்டூர் அணை திறப்பதன் மூலம் பாசன வசதி பெற்று வந்தன. காவிரி டெல்டா பகுதி விவசாயத்திற்காக ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்.

               அங்கிருந்து கல்லணை மற்றும் கீழணை, வடவாறு வழியாக காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரிக்கு ஜூலை 12ம் தேதி வந்தடையும். அதன் பிறகு பாசன வாய்க்கால்கள் மூலம் கட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் தாலுகா பகுதி விளை நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீரைக் கொண்டு இரண்டு தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக ஆடிப் பெருக்கு ( ஆடி மாதம் 18ம் தேதி) அன்று விதை விதைப்பார்கள். அதே நேரத்தில் நிலங் களை ஏர் ஓட்டி பதப்படுத்தி தயாராக வைத்திருப் பார்கள். விதை விதைத்த 30ம் நாளில் நாற்றை பிடுங்கி பதப்படுத்திய நிலங்களில் நடவு செய் வார்கள்.

                 நாற்று பச்சை பிடித்து செழிப்பாக வளர்ந்த நிலையில் அக்டோபர் இரண் டாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை பெய் யும். அதிகமாக மழை பெய்தாலும், பயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக பயிர்கள் மேலும் செழிப்பாக வளர்ந்து கூடுதல் மகசூல் தரும். நன்கு விளைந்த பயிர்களை டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் அறுவடை செய்வார்கள். இந்த முறையில் ஏக்கருக்கு 45 மூட்டை நெல் மகசூல் கிடைத்தது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

                இந்த நடைமுறை கடந்த சில ஆண்டாக பின்பற்றப்படுவதில்லை. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கான தண்ணீர் காலம் தவறி திறக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் அணை திறப்பதால் செப்டம்பர் மாதத்தில் விதை விதைத்து அக்டோபர் மாதத்தில் நாற்று நடுகின்றனர்.இவ்வாறு நாற்று நட்ட ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி நாற்றுகள் சேதமடைகின்றன. மழை நீர் வடிந்ததும் எஞ்சிய நாற்றுகளை காப்பாற்ற விவசாயிகள் கூடுதல் உரங்கள் தெளிக்க வேண்டியுள்ளது. அப்படியே உரங்கள் தெளித்தாலும் போதிய விளைச்சல் இருப்பதில்லை. விளைந்த நெல் லும் தரமில்லாததால் விலை போகாத நிலை உள்ளது.

                 இந்நிலையில் இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு இதுவரை மேட்டூர் அணை திறக்கப்படாததால், வரும் ஆகஸ்ட் 3ம் தேதி (ஆடிப் பெருக்கு) அன்று விதை விதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை தற்போது 79.77 அடி அளவிற்கே தண்ணீர் உள்ளதால் பாசனத்திற்கு திறந்து விட ஒரு மாதத் திற்கு மேலாகும் எனக் கூறப்படுகிறது.அதிகாரிகள் கூறுவது போல் ஆகஸ்ட் மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு எந்த வித பயனும் இல்லை. மாறாக அதிக இழப்புதான் ஏற்படும் நிலை உள்ளது.

                இதனை தவிர்த்திட அணையில் தற்போது உள்ள 79.77 அடி தண்ணீரில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டால் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் வீராணத் திற்கு தண்ணீர் வந்து சேரும். அதனைக் கொண்டு விதை விதைக் கும் பணியை துவங்க முடியும். பின்னர் செப்டம்பர் முதல் வாரத்தில் 26 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டால் நாற்று நடவு பணி எளிதாக செய்ய முடியும்.அதன் பிறகு அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி விடும் என்பதால் தண்ணீர் தேவைப்படாது. ஆகவே மேட்டூர் அணையில் தற் போது உள்ள நீரில் இருந்து உடனடியாக 10 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி டெல்டா கடைமடை பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior