உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்: அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா

கோவையில் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் மக்கள் வெள்ளமாகக் காட்சியளிக்கும் வஉசி
              தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி அமையும் காலம் நெருங்கிவிட்டது. நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை அதிமுக அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்; ஜனநாயக முறையில் திமுகவை அகற்றும் பணியை நீங்கள் நிறைவேற்றுங்கள்; தேர்தல் பணிக்குத் தயாராகுங்கள் என்றும் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். 
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோவை வஉசி பூங்கா மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:
            கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை. தமிழ் மொழியும் வளர்ச்சி அடையவில்லை, தமிழர்களும் வளர்ச்சி அடையவில்லை. தமிழின் பெயரால் ஒரு குடும்பம் மட்டுமே  அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை உள்பட தமிழர்களின் அனைத்து உரிமைகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஐந்தாவது ஆண்டில் திமுக அரசு அடியெடுத்து வைத்திருக்கிறது. இது தேர்தலுக்கான ஆண்டு; எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும். வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையாற்ற, தங்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா என்பதையும், வாக்களிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். திமுக அரசின் தோல்விகளையும், சாதனைகளையும் கணக்கு  போடுவதற்கான நல்ல தருணமும் இதுவே. 
               திமுக அரசின் தோல்விகளே ஏராளம். சாதனைகள் என்று சொல்லக் கூடியவை மிகக் குறைவானவை என்பது மட்டுமல்லாமல் அவை வெறும் மாயத் தோற்றங்கள்தான். இந்த அரசின் முதல் தோல்வி அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு. அடுத்ததாக, மின்சாரப் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது. தற்போது பிற மாநிலங்களை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மின்வெட்டைக் கட்டாயமாக மக்கள் மீது திணிக்க வேண்டிய அளவுக்கு மின்உற்பத்தியில் பின்னடைவை தமிழகம் சந்தித்து வருகிறது.விவசாய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் பாதிப்பு திருப்பூர் ஜவுளித் தொழில் முதல் சிவகாசி அச்சுத் தொழில் வரை தெளிவாகத் தெரிகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் பாறைகள் வெளிப்படும் அளவுக்கு மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு செ.மீ. மண் இயற்கையாக உருவாவதற்கு 200 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இப்போதைய நிலையில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய 10 லட்சம் ஆண்டுகள் தேவைப்படும். பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது. இலவச கலர் டிவி திட்டம் சாதனையாக சொல்லப்பட்டாலும், அதற்கு கேபிள் கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.200 வரை முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினருக்குத் தான் செலுத்த வேண்டியுள்ளது. 
             ரேஷனில் ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது. அரசு இருப்பில் இருந்து மக்களுக்காக அளிக்கப்படும் தரமான அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. பழைய கெட்டுப்போன அரிசி ரேஷன் கடைகள் மூலமாக மக்களைச் சென்றடைகிறது. அரிசி கடத்தலில் அரசு அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் கைகோர்த்துச் செயல்படுகின்றனர்.  மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தில், தனியார் நிறுவனத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சிக்குன் குனியா, காலரா, டைபாய்டு போன்ற நோய்களுக்கு இத் திட்டத்தில் சிகிச்சை பெற முடியாது. அறுவைச்சிகிச்சைகளுக்கு மட்டுமே இத் திட்டத்தில் பயன்பெறலாம். ஆனால், இந்த அறுவைச்சிகிச்சைகள் ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகின்றன.  இதற்கு காப்பீட்டுத் திட்டம் தேவையில்லை. செம்மொழி மாநாடு என்ற போர்வையில், கோவையில் நடத்தப்பட்ட மாநாட்டுக்காக தமிழகம் முழுவதும் திமுகவினரால் ரூ.2 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 
                உணவுப் பொட்டலங்கள் வழங்கியதில் மட்டும் ரூ.2 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கிறது. தமிழகத்தின் நலனைக் காக்க திமுக அரசை அகற்ற வேண்டும். மீண்டும் நல்லாட்சி மலர அதிமுகவுக்கு வாக்களிப்பது என அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior