உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

கடலூர் பாதாள சாக்கடைத் திட்டபணியால் குடிநீர் பைப் "கட்'

கடலூர்:

                திருப்பாதிரிப்புலியூர் போடி செட்டித் தெருவில் பாதாள சாக்கடைப் பணி செய்யும் போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. திருப்பாதிரிப்புலியூர் போடிசெட்டித் தெருவில் பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வருகிறது.தற்போது வீடுகளுக்கு பைப் லைன் இணைப்பு கொடுப்பதற்காக பொக்லைனால் தோண்டும் போது குடிநீர் பைப்பும் உடைந்து பழுதாகி விடுகிறது.

                  அதை உடனடியாக சரி செய்யாமல் அப்படியே அரைகுறையாக விட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் நேரங்களில் குடிநீர் வீணாகி சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கடலூரில் பல இடங்களில் உள்ளன. பாதிக்கப்பட்ட வீடுகளில் இருந்து நகராட்சிக்கு புகார் செய்தால் ஒப்பந்தக்காரரிடம் போய் சொல்லுங்கள் என பொறுப்பற்ற பதிலை கூறி முடித்துக் கொள்கிறார்களாம். இதனால் குடிநீர் வீணாகி செல்வதோடு தெருக்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior