உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

கடலூரில் திருமாணிக்குழி பாலத்தை சீரமைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்

கடலூர்:

               கடலூரில் மா.கம்யூ., ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுகு மாறன், தட்சணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர் மாதவன், உறுப்பினர்கள் வைத் திலிங்கம், தயாளன், நீலநாராயணன், அய் யாதுரை, ராமர், மச்சகாந்தி, செந் தாமரைக்கண்ணன் பங்கேற்றனர்.

              கூட்டத்தில்,பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விலை உயர்வை ஈடுகட்ட மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள சுங்க வரியை திரும்பப் பெற வேண்டும். கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலூர் முதுநகரில் இருந்து சேலம் செல்லும் ரயிலை திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும். வெள்ளப் பெருக்கில் சேதமடைந்த திருமாணிக்குழி பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior