உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

சிதம்பரத்தில் 'அரசு, ரோட்டரி சங்க பங்களிப்புடன் தடுப்பனை'

சிதம்பரம்:

              வெள்ளநீரை தேக்கி வைக்க ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தமிழக அரசு நிதிஉதவி மற்றும் சர்வதேச ரோட்டரி சங்க பங்களிப்பு பெற்று தடுப்பணை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என புதிதாக பொறுப்பேற்ற சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்தார்.

             சிதம்பரத்தில் ரோட்டரி சங்க 2010-11-ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் தலைவர் ஏ.அஷ்ரப்அலி புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக எஸ்.செந்தில்குமார், செயலராக கே.பார்த்தசாரதி, பொருளராக எஸ்.வெங்கடேசன் உள்ளிட்டோர் பதவிஏற்றனர். ரோட்டரி மாவட்ட முன்னாள் கவர்னர் ராஜதுரை மைக்கேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் தலைவர் எஸ்.செந்தில்குமார் ஏற்புரையாற்றுகையில் சிதம்பரம் நகரில் உள்ள அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ரூ.1 கோடி செலவில் மின்மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். விழாவில் முன்னாள் தலைவர்கள் கே.சீனுவாசன், ஏ.அஷ்ரப்அலி, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலர் கே.பார்த்தசாரதி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior