உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

பண்ருட்டி பகுதியில் மானிய விலையில் விதைகள்

பண்ருட்டி:

          பண்ருட்டி பகுதியில் 50 சதவீத மானிய விலையில் காய்கறி விதைகள் வாங்கிப் பயன் பெற விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராமலிங்கம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:

               ஒருங்கிணைந்த தோட்டக்கலை காய்கறி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஆடிப் பட்டத்தில் பயிரிட பண்ருட்டி வட்டார விவசாயிகள் அண்ணாமலை கத்திரி விதை 50 சதவீத மானிய விலையில் ஒரு கிலோ 400ஆக விற் பனை செய்யப்படுகிறது. அதுபோல் புடலங்காய், பாகற் காய், வெண்டைக் காய் ஆகிய விதைகளும் 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு விற் பனை செய்யப்படுகிறது.

                இது போல் நகரம், கிராமங்களில் காய் கறிகளை வீட்டுத் தோட்டம் மூலம் உரம், பூச்சி மருந்து இல் லாமல் ஆரோக்கியமாக உற்பத்தி செய்ய பொதுமக்களுக்கு 20 ரூபாய்க்கு எட்டு வகையான பாகற் காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், பூசணி, கத்திரி, கீரை, பீர்க்கங்காய் ஆகிய விதைகள் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மழைக் காலம் துவங்கியுள்ளதால் விவசாயிகளும், வீட்டுத் தோட்டம் வைத்திருப்பவர்களும் தேவைப்படும் விதைகளை பண்ருட்டி பூங்குணம் உதவி தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் வாங்கிப் பயனடையலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior