உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

விருத்தாசலம் பஸ் நிலைய ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

விருத்தாசலம்:

             விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி கமிஷனர் தலைமையில் அதிகாரிகள் அகற்றினர். விருத்தாசலம் பஸ் நிலையத்தின் உள் பகுதியிலும், வெளிப்பகுதியிலும் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பெட்டிக் கடைகள், நடைபாதை கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதனால் பஸ் நிலையத்தில் தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

                 மேலும் பஸ் நிலையம் முன்புறம் உள்ள காமராஜர் பூங்காவையும் தனி நபர் கள் ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்ததால் அங்கு பூங்கா இருப்பதே பொதுமக்களுக்கு தெரியாத நிலை இருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் ஒரு சிலர் அகற்றாததால் நேற்று அதிரடியாக நகராட்சி கமிஷனர் திருவண்ணாமலை மற்றும் அதிகாரிகள் முன் னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior