உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

பண்ருட்டியில் கிடப்பில் போடப்பட்ட சாலை: விவசாயிகள் கடும் அவதி

பண்ருட்டி:

                பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் - ஒறையூர் இடையிலான 3 கி.மீ., தார் சாலையை பொக்லைன் இயந்திரம் உடைத்து ஐந்து மாதங்களாகியும் சீரமைக்காததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் - ஒறையூர் இடையிலான 3 கி.மீ., தார்சாலை அமைக்க கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நபார்டு திட்டத்தின் கீழ் 28 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்து டெண்டர் விடப்பட்டது. பணிகள் துவங்குவதற்காக ஐந்து மாதங்களுக்கு முன் ஏற்கனவே இருந்த தார் சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் முழுவதும் கொத்தி எடுத்தனர்.பின் ஒப்பந்ததாரர் குறிப்பிட்ட அளவுபடி ஒன்னரை ஐல்லிகள் ஏதும் வைக்காததால் பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டது.

               இதனால் பண்டரக் கோட்டை, வாணியம்பாளையம், நல்லூர்பாளையம், ஒறையூர் செல்லும் கிராம மக் கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஒன்றிய பொறியாளர், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் இப்பகுதியில் ஒன்னரை ஐல்லிகள் வைத்து ஒன்றரை மாதங்களாகியும் இதுவரை பணிகள் துவங்கப்படவில்லை. இந்த சாலை வழியாக தினமும் கத்திரி, வெண்டை, பூசணி, கொய்யா போன்ற தோட்டப் பயிர்கள் கொண்டு செல்லும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior