உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 14, 2010

உயிரி இடுபொருள் உற்பத்தி மையம் : கடலூர் வட்டாரத்தில் துவக்க விழா

கடலூர்:

                  கடலூரில் உயிரி இடுபொருட்கள் உற்பத்தி மையம் துவக்க விழா நடந்தது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் துறை மூலம் உயிரி இடுபொருட்கள் உற்பத்தி மையம் அமைத்திட 2.5 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. கடலூர் வட்டத்தில் இடுபொருட்கள் உற்பத்தி மையம் அமைத்திட காரணப் பட்டு டான்வெப் பண்ணை மகளிர் குழு தேர்வு செய்யப்பட்டு, இக் குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்கள் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம் பயிற்சி பெற்று குழு மூலம் உற்பத்தியை துவக்கி உள்ளனர்.

                தூக்கணாம்பாக்கத்தில் அமைந்துள்ள உயிரியல் காரணி உற்பத்தி மையத் தைத் துவக்கி வைத்த வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன், மையத்தில் தயாரான "சூடோமோனாஸ்' மற்றும் உற்பத்திக்கு பயன்படுத் தப்படும் இடுபொருட்கள், இயந்திரங் களை பார்வையிட்டார். பின்னர் "சூடோமோனாஸ்' உற்பத்தி மற்றும் அதனைக் கொண்டு விதை நேர்த்தி செய்வதால் ஏற்படும் நன்மைகளை விளக்கினார். தரமான உயிரியல் காரணி உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பங்கள் குறித்து வேளண் துணை இயக்குனர் பாபுவும், சுற்றுச் சூழல் பாதிக்காமல் நோய்களை கட்டுப்படுத்த உயிரியல் காரணிகளை பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை உதவி இயக்குனர் இளவரசனும் விளக்கினர்.விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளர் புத்ததாசன், வேளாண் அலுவலர்கள் சின்னக்கண்ணு, உதவி வேளாண் அலுவலர் ஜெயராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior